உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல், 65; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆனத்துார் காலனி பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 38; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி