உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்

ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை, சேவூர், இறையானுார், கொங்கரப்பட்டு, குடிசைப்பாளையம் ஆகிய இடங்களில் சமீப காலமாக, மர்ம விலங்கு கடித்து, 75க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன; 50க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு, திண்டிவனம் - வந்தவாசி சாலையில் உள்ள தாதாபுரத்தில், ஏழுமலை, 55, என்பவருக்கு சொந்தமான ஆட்டு பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில், ஆறு ஆடுகள் உயிரிழந்தன; 10 ஆடுகள், கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீசார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஓநாய்கள் தான் ஆடுகளை கடித்திருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறினர். எனினும், ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ