மேலும் செய்திகள்
2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
15-Oct-2024
மயிலம் : மயிலம் அருகே கடன் தகராறில் மூதாட்டியை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அருகே உள்ள தென்பசியார் கிராமத்தில் வசித்து வருபவர் செல்வராஜ் மனைவி மல்லிகா, 57; இவர் தனது வீட்டின் அருகில் வசிக்கும் பிரகாஷிடம் கடன் பெற்றுள்ளார். நேற்று முன்தினம் மல்லிகாவின் வீட்டிற்கு வந்து பிரகாஷ் கொடுத்த கடனை திருப்பி கேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதில் பிரகாஷ், 40; இவருடைய மனைவி ரேவதி, 38; மகன் ஜெகதீஷ், 16; ஆகியோர் மல்லிகாவை தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மல்லிகா திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.இதுகுறித்து மயிலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் பிரகாஷ் மற்றும் அவரது மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
15-Oct-2024