உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை

பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை

செஞ்சி : செஞ்சி பேரூராட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கலையரசி முன்னிலை வகித்தார். மஸ்தான் எம்.எல்.ஏ., விழாவை துவக்கி வைத்து, துாய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், அலுவலக பணியாளர்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, நகர செயலாளர் கார்த்திக், பேரூராட்சி கவுன்சிலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். இளநிலை உதவியாளர் பாலாரங்கன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை