உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  நல்லாப்பளையம் பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

 நல்லாப்பளையம் பள்ளியில் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் வினா விடை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நல்லாப்பாளையம் உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா தலைமை தாங்கினார். காணை சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட கவுன்சிலர் முருகன், வழக்கறிஞர் ராஜா, முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுதா வரவேற்றார். நிகழ்ச்சியில் 10 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை வெல்வது எப்படி என்ற புத்தகத்தை எம்,எல்.ஏ., வழங்கி பேசினார். தொடர்ந்து கடையம், நல்லாப்பளையம் பகுதி மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த முயற்சி செய்வதாக உறுதியளித்தார். காணை துணை சேர்மன் வீரராகவன், ஊராட்சி தலைவர் நித்யா, பி.டி.ஏ., தலைவர் நரசிங்கபெருமாள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வளர்மதி, பள்ளி ஆசிரியர்கள் குமரன், திருநாவுக்கரசு உட்பட பலர் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை