உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே தனியார் கெஸ்ட் அவுஸ் செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 40; பெரிய முதலியார்சாவடியில் உள்ள தனியார் பீச் ரிசார்ட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்.இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, பக்கத்து கெஸ்ட் அவுசில் இருந்து மதுபாட்டில்கள் வீசப்பட்டது. இதை சுப்ரமணியன் தட்டி கேட்டபோது, அங்கு வேலை செய்யும் பிரபாகர், 30; கரிகாலன், 30; ஆகியோர் சுப்ரமணியனை தாக்கினர்.புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார், பிரபாகர், கரிகாலன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை