உள்ளூர் செய்திகள்

 தேர் பவனி

விழுப்புரம்: விழுப்புரம் துாய சவேரியர் ஆலயத்தின் 151ம் ஆண்டு பெருவிழா தேர் பவனி நடந்தது. கடந்த நவம்பர் 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. சேலம் மறை மாவட்ட ஆயர் ராயப்பன் கொடியேற்றி வைத்து, ஆண்டு பெருவிழா திருப்பலியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 26ம் தேதியிலிருந்து ஆண்டு பெருவிழா சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கடந்த 2ம் தேதி வரை நவ நாட்களில் ஆண்டு பெருவிழா திருப்பலிகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு தேரோட்டம் நடந்தது. முன்னதாக, புதுவை - கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருவிழா திருப்பலியை நிறைவேற்றினார். தொடர்ந்து, இரவு 7:30 மணிக்கு ஆலயத்திலிருந்து ஆடம்பர தேர்பவனி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேர்பவனி வந்தது. திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஆலய பங்கு தந்தை லுார்துசாமி, உதவி பங்குதந்தை ஜியோபிரான்சிஸ் தலைமையில் குழுவினர் பெருவிழா நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை