உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வாகனம் மோதி மூதாட்டி பலி

வாகனம் மோதி மூதாட்டி பலி

வானுார்: கிளியனுார் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி இறந்தார்.கிளியனுார் அடுத்த ஓமந்துாரை சேர்ந்தவர் பூமிதேவி, 70; இவர் நேற்று அதிகாலை வீட்டில் இருந்து வயல்வெளிக்குச் சென்றார். அப்போது, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச்சாலையில் ஓமந்தூர் சந்திப்பில் அந்த வழியாக சென்ற வாகனம் பூமிதேவி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் சம்பவ இடத்திலேயே பூமிதேவி இறந்தார். கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ