உள்ளூர் செய்திகள்

மயான கொள்ளை

விழுப்புரம்: அனிச்சம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.விழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மகாராஜபுரம் மயானத்தில் மயானக்கொள்ளை நடந்தது.பக்தர்கள் அங்காளம்மன், காளி, குறத்தி, காட்டேரி, பாவாடைராயன் சுவாமிகள் வேடத்தில் ஊர்வலமாக சென்றனர். இரவு 7.00 மணிக்கு கும்ப படையல் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ