உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளியில் மனிதநேய வார நிறைவு விழா நடந்தது.மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து மனிதநேயம் குறித்து மாவட்ட அளவில் பள்ளிகளில் நடந்த கட்டுரை, பேச்சு உள்பட பல போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவையொட்டி, மனிதநேயம் குறித்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் அகத்தியன், மணி, தனஞ்செழியன், குமரவேல் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை