உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம் கோவிலில் கிருத்திகை விழா

மயிலம், : மயிலம் முருகன் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.கிருத்திகை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், அங்கபிரதட்சணம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மலைக்கோயில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு 8:00 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது.

செஞ்சி

கிருஷ்ணாபுரம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில் நேற்று மாசி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி