உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  பக்தர்களுக்கு வழங்க லட்டு தயார்

 பக்தர்களுக்கு வழங்க லட்டு தயார்

விழுப்புரம்: விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்தது. வைகுண்ட ஏகாதசியை யொட்டி, விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் வரும் இன்று அதிகாலை 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இங்கு, சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகிகள் மூலம் பிரசாதமாக லட்டு வழங்குவது வழக்கம். இதையொட்டி, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் சி.ஆர்., ஜோதி லட்டு கமிட்டி சார்பில் 36வது ஆண்டாக விழுப்புரத்தில் நடந்தது. லட்டு தயாரிப்பு பணிகளில் லட்டு கமிட்டி உறுப்பினர்கள் ஜீவா, ராஜா, வீரமணி, கருணா, சங்கர், கோவிந்தன், செல்வம், அரிகரசுதன் ஆகியோர் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை