கரிவரதராசபெருமாள் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா
திண்டிவனம் : திண்டிவனம் அடுத்த வைரபுரத்தில் கரிவரதராச பெருமாள் கோவிலில் நன்னீராட்டு பெரு விழா நடந்தது.விழாவையொட்டி, காலை 5:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழாவும் நடந்தது.காலை 9:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடும், 9:30 மணிக்கு விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள், மணிவாசகர் அருட்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.