உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

தாய், மகள் மாயம் போலீஸ் விசாரணை

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் மாயமான தாய், மகளை போலீசார் தேடி வருகின்றனர். ஜமியத் நகரை சேர்ந்தவர் தமிமுல் அன்சாரி. இவரது மனைவி நாச்சியா, 24; இவர்களது மகள் அப்ரீதா, 4; கடந்த 9ம் தேதி காலை 9;00 மணிக்கு நாச்சியா, தனது மகளுக்கு ஆதார் கார்டு வாங்க, வீட்டில் இருந்து குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து, காணாமல் போன தாய், மகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை