திண்டிவனத்தில் ரத்ததான முகாம்
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த ரத்ததான முகாமை அமைச்சர் துவக்கி வைத்தார். விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி சார்பில் திண்டிவனம், மயிலம் முருகன் திருமண நிலையத்தில் ரத்ததான முகாம் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபு ஏற்பாட்டில் நடந்த முகாமை அமைச்சர் பொன்முடி துவக்கி வைத்தார். இதில் திண்டிவனம் அரசு மருத்துவமனை ரத்தவங்கி டாக்டர் பாரதி தலைமையிலான மருத்துவ குழுவினர், 48 பேரிடம் ரத்ததானம் பெற்றனர்.இதில் மாவட்ட செயலாளர் சேகர், மஸ்தான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி, நகர செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் ரமணன், இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், துணை அமைப்பாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், பழனி, ராஜாராம், சேர்மன்நிர்மலா ரவிச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, நகர துணை செயலாளர் கவுதமன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.