உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

 அரசு கல்லுாரியில் கருத்தரங்கம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அன்னியூர் அரசு கலைக் கல்லுாரியில், மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி என்.எஸ்.எஸ்., அலுவலர் அருணாச்சலம் வரவேற்றார். பேராசிரியர் ஜெயந்தி, தமிழ் வளர்த்துறை உதவி இயக்குநர் சிவசங்கரி முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் பட்டிமன்ற நடுவராக செயல்பட்டார். தமிழ் வளர்ச்சித் துறை தட்டச்சர் பவித்ரா, ஆசிரியர் கோவிந்தராஜ், பேராசிரியர்கள் சுவாமிநாதன், கிரிஜா, முஹமத் உசேன், சதீஷ்குமார் மற்றும் ரேவதி, கிரிஷ்வர், ராசு, விஜயலட்சுமி ஆகியோர் இன்றைய சூழலில் தமிழ்மொழி குடும்பத்தால் வளர்கிறதா அல்லது கல்வியால் வளர்கிறதா என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினர். மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ரகுபதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை