உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மயிலம் முருகன் கோவிலில் தைப் பொங்கல் திருவிழா

மயிலம் முருகன் கோவிலில் தைப் பொங்கல் திருவிழா

மயிலம் : மயிலம் முருகன் கோவிலில் தைப்பொங்கல் திருவிழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று அதிகாலை 6:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மூலவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 9:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்