உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

 மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய டிப்பர் லாரியை கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். விழுப்புரம் மாவட்ட கனிம வளத்துறை மண்டல பறக்கும் படை உதவி இயக்குனர் முத்து தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருக்கனுார் பகுதியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த டிப்பர் லாரியை நிறுத்திய போது டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தப்பியோடினார். அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மூன்று யூனிட் மணல் கடத்தி வருவது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, விக்கிரவாண்டி போலீசில் ஒப்படைத்தனர். உதவி இயக்குனர் முத்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை