உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர் கைது

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி அருகே அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவானந்தம் மற்றும் போலீசார் பனையபுரம் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டி வந்தவரை போலீசார் நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பனையபு ரத்தை சேர்ந்த விக்ரம், 21;என தெரியவந்தது.போலீசார் அவர் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்து காவலில் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி