உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

புளிய மரத்தில் கார் மோதல் ஆசிரியர் உட்பட 4 பேர் பலி

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் புளிய மரத்தில் கார் மோதியதில் ஆசிரியர் பாலமுருகன் 43, உட்பட 4 பேர் பலியாயினர்.அருப்புக்கோட்டை அருகே கீழ முடிமன்னார்கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் .புளிச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த இவர் கலைக்குழுவும் நடத்தி வந்துள்ளார். நேற்று இவர் தனது கலைக்குழுவை சேர்ந்த சவ்வாஸ்புரம் மணி 18, ஆலடிப்பட்டி சின்னத்துரை 22 ,திருநெல்வேலி மாவட்டம் நடுவக்குறிச்சி முகமது அப்துல் ராஹிக் 20, ஆகியோருடன் காரில் வெளியூர் சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். காரை ஆசிரியர் ஓட்டினார்.மாலை 6:10 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே கல்லுாரணியில் கட்டுப்பாட்டை இழந்த கார் ரோட்டோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில் காரில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.எம்.ரெட்டியபட்டி போலீசார் , தீயணைப்பு துறையினர் இடுபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை