உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

விடைத்தாள் திருத்தும் பணிகள் துவக்கம்

விருதுநகர் : விருதுநகரில் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 1 முதல் துவங்கி நடந்து வருகிறது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் ராஜபாளையம் எஸ்.எஸ்., ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர் முன்னிலையில் 6 உதவி தேர்வர்களை கொண்டு பிளஸ் டூ வினாத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியது.விருதுநகர் கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதே நிலையிலான அலுவலர்களை கொண்டு திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்