உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் விளக்கு முத்திரை கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் விளக்கு முத்திரை கண்டெடுப்பு

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் ஆன விளக்கு, முத்திரை, கல்பந்து, வட்ட சில்லு கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், பெண்ணின் தலைப்பகுதி, கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, அகல் விளக்கு, எலும்புகள் என 1300 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதிக அளவிலான உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட விளக்கு, முத்திரை, கல்பந்து, கல் வட்ட சில்லு கண்டெடுக்கப்பட்டது. அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ''இங்கு முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்று கிடைத்து வருகின்றது. அதன்படி வணிகத்திற்கு முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். வெளிச்சத்திற்காக விளக்கு பயன்பட்டுள்ளது. கல்பந்து வேட்டையாடுவதற்கு அல்லது எடைபொருளாக பயன்பட்டிருக்கலாம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை