மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
4 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
4 hour(s) ago
ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பாக்கியநாதன். புதுப்பட்டி அருகே செங்கல் சூளை வைத்துள்ளார். இவரது மகன் ஞானசேகர், 27. தந்தைக்கு உதவியாக உள்ளார். செங்கல் சூளையில் கோதை நாச்சியார்புரத்தைச் சேர்ந்த முருகராஜ், குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்தார். மூன்று மாதங்களுக்கு முன் சரியாக வேலை செய்யவில்லை எனக் கூறி வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.அதே செங்கல் சூளையில் அலுவலக மாடியில் முருகராஜ் மகன் மணிகண்டன் வளர்த்த புறாக்கள் மாயமானது குறித்து ஞானசேகரிடம் கேட்டதற்கு புறாக்கள் பறந்து விட்டதாக அலட்சியமாகக் கூறியுள்ளார். நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் லோடு இறக்க சென்ற ஞானசேகர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வடக்கு போலீசார், கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த மணிகண்டன், அவரது நண்பர்கள் நாகராஜ், பேச்சிமுத்து ஆகிய மூவரை தேடி வருகின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago