உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இன்ஜினை மாற்றி பழைய ஜீப் விற்பனை; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

இன்ஜினை மாற்றி பழைய ஜீப் விற்பனை; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு

ஸ்ரீவில்லிபுத்துார் : சிவகாசியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் 2023 ஆகஸ்ட்டில் திண்டுக்கல் பித்தாளைப் பட்டியில் உள்ள ஸ்ரீராம் ஆட்டோ மால் இந்தியா பிரைவேட் நிறுவனத்தில் ஒரு பழைய மகேந்திரா பொலிரோ ஜீப்பை, ரூ..2.56 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.அந்த ஜீப்பை சிவகாசி கொண்டு வந்து ஒரு ஒர்க் ஷாப்பில் பரிசோதனை செய்யும் போது, அதில் உள்ள இன்ஜின் அந்த வாகனத்திற்கு உரியதல்ல என தெரிய வந்தது. இதனையடுத்து விற்பனை செய்த நிறுவனத்திடம், ஜீப்பை திரும்ப பெற்றுக் கொண்டு பணத்தை திரும்ப கேட்டபோது அவர்கள் வழங்கவில்லை.ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முத்துக்கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் சக்கரவர்த்தி உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.இதில் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தை திரும்ப பெற்றுக் கொண்டு அதற்குரிய பணத்தை திரும்ப வழங்கவும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.1 லட்சம், வழக்குச் செலவு ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை