| ADDED : ஆக 13, 2024 12:18 AM
விருதுகநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:விருதுநகர் மாவட்டத்தில் நபார்டு வங்கி நிதியுதவியில் மானாவாரி, தரிசு நிலங்களை மேம்படுத்துதல், சிறுதானிய சாகுபடி திட்டம் மூலம் விதைகள், நுண்ணுாட்டசத்து, விதை நேர்த்தி உயிர் உரங்கள், மரக்கன்றுகள், பெண்கள் கூட்டமைப்பு சுழல் நிதி மூலம் கடனுதவிகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும் திருச்சுழி பகுதியில் 20 கிராமங்களில் 368 விவசாயிகளின் நிலத்தில் 800 ஏக்கரில் இயற்கை முறைப்படி பருத்தி விவசாயம் செய்யும் 5 விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டது.