உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 46.77 லட்சம் இலவச சேலை 22 லட்சம் வேட்டி உற்பத்தி

46.77 லட்சம் இலவச சேலை 22 லட்சம் வேட்டி உற்பத்தி

விருதுநகர் : பொங்கல் பண்டிகைக்காக இலவச வழங்க 46.77 லட்சம் சேலை, 22 லட்சம் வேட்டிகளை விருதுநகர் நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உற்பத்தி செய்துள்ளது. மாவட்ட கைத்தறித்துறை உதவி இயக்குனர் வெங்கடேசலு கூறியதாவது:2024 பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு இலவமாக வழங்குவதற்காக 19.60 லட்சம் சேலைகள் நெய்வு செய்து வழங்க விருதுநகர் மாவட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கத்தினருக்கு இலக்கு நிர்ணயம் செய்து தமிழக அரசு நுால்கள் வழங்கியது. இந்த பணிக்காக மாவட்டத்தை சேர்ந்த 29 கூட்டுறவு சங்கங்களின் 4500 நெசவாளர்களும் 2023 டிச. 31 க்குள் 100 சதவிகித சேலைகளையும் நெய்து தமிழக அரசு வழங்கிய இலக்கை பூர்த்தி செய்தனர். மேலும் 2024 பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலைகள் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் மக்களுக்கு கொடுப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 2023 டிச. 31 க்குள் நெசவாளர்கள் நெய்து வழங்கவும் அதற்கான நுால்கள் வழங்கப்பட்டது.இதில் 22 லட்சம் வேட்டிகள், 27.17 லட்சம் சேலைகள் நெய்து, அரசு வழங்கிய பணியை 100 சதவிகிதம் விருதுநகர் மாவட்ட நெசவாசளர் கூட்டுறவு சங்கத்தினர் முடித்து அனுப்பி வைத்தனர். இங்கிருந்து அனுப்பட்ட வேட்டி, சேலைகள் 8 மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி