உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

 வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

விருதுநகர்: விருதுநகர் அருகே என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் சுதர்சன். இவரின் அக்கா பவித்ராவிற்கு நவ.17ல் மதியம் 1:00 மணிக்கு விபத்து ஏற்பட்டதால் பார்ப்பதற்காக திருவனந்தபுரத்திற்கு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க வளையல்கள், ஒரு பவுன் தங்க நாணயம், ஒரு கிராம் தங்க நாணயம், தங்கத்தோடு ஆகியவை திருடு போனது தெரிந்தது. ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !