உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பருப்பு விலை உயர்வு குறைந்தது வத்தல் விலை

பருப்பு விலை உயர்வு குறைந்தது வத்தல் விலை

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் துவரம்பருப்பு 100 கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ. 13,100, உளுந்தம் பருப்பு லயன் 100 கிலோவிற்கு ரூ. 300 உயர்ந்து ரூ.10,300, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 10,300, முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 1000 குறைந்து ரூ. 15,000 முதல் ரூ. 18,000, குண்டூர் வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 2000 குறைந்து ரூ. 18,000 முதல் ரூ. 20,000 என விற்கப்படுகிறது.க.எண்ணெய் 15 கிலோ ரூ .30 உயர்ந்து ரூ. 2830, ந.எண்ணெய் 15 கிலோ ரூ. 7095, பாமாலின் 15 கிலோவிற்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 1345, சர்க்கரை 50 கிலோ ரூ. 2070, மைதா 90 கிலோ ரூ. 4280, பொரிகடலை 55 கிலோ ரூ. 5000, ரவை 30 கிலோ ரூ. 1480, கொண்டைக்கடலை 100 கிலோவிற்கு ரூ. 75 உயர்ந்து ரூ. 6275 என விற்கப்படுகிறது.உருட்டு உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ. 12,000, பட்டாணி பருப்பு 100 கிலோ ரூ. 6400, மல்லி லயன் 40 கிலோ ரூ. 3450 முதல் ரூ. 3600, மல்லி நாடு 40 கிலோ ரூ. 2600 முதல் ரூ. 3000 என விற்பனை செய்யப்படுகிறது.தொலிபருப்பு 100 கிலோ ரூ. 10,400, உளுந்தம் பருப்பு நாடு 100 கிலோ ரூ. 9200, பாசிப்பயறு நாடு 100 கிலோ ரூ. 9600, பாசிப்பயறு லயன் மீடியம் 100 கிலோ ரூ. 10,700, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 5600, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2700 என விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ