உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  எம்.ஜி.ஆர் நினைவு நாள்

 எம்.ஜி.ஆர் நினைவு நாள்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க. சார்பில் பல்வேறு இடங்களில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 38ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. எம்.எல்.ஏ மான்ராஜ், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் வசந்தி, முன்னாள் எம்.எல்.ஏ. சந்திர பிரபா, கட்சி நிர்வாகிகள் முத்தையா, முத்துராஜ், மயில்சாமி, காமராஜ், அங்கு ராஜ் மற்றும் நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். *அருப்புக்கோட்டையில் பெர்கின்ஸ்புரத்தில் எம்ஜிஆர் சிலைக்கு நகர செயலாளர் சோலை சேதுபதி, ஒன்றிய செயலாளர் சங்கரலிங்கம் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் ராமர், ஜெ., பேரவை துணைச் செயலாளர் சவுண்டையா, மாவட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் சக்கரவர்த்தி சங்கர், மகளிர் அணி நகரச் செயலாளர் பிரேமா, இணை செயலாளர் சித்ரா ஜெய்சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். *விருதுநகரில் அவரது சிலைக்கு மேற்கு மாவட்ட கட்சி அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் அ.தி.மு.க., நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். *ராஜபாளையம் தெற்கு நகரம் சார்பில் மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் , வடக்கு நகரம் சார்பில். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் வனராஜ் , நகரச் செயலாளர் துரை முருகேசன் உட்பட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை