உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அக்காவை கொன்ற தம்பி 

அக்காவை கொன்ற தம்பி 

விருதுநகர்:விருதுநகரில் அக்காவை உடன் பிறந்த தம்பி வெட்டிக் கொலை செய்தார்.விருதுநகர் ஆத்துமேடு சிவந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி 43. கூலித்தொழிலாளி. இவரது அக்கா திருமேனி 45. இதே பகுதியில் பகுதியில் வசித்து வருகிறார். திருமேனிக்கும் பெரியசாமிக்கும் பிரச்னை இருந்துள்ளது. இருவருக்கும் இடையே நேற்று இரவு 8:00 மணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் திருமேனியை பெரியசாமி கழுத்தில் அரிவாளால் வெட்டினார். சம்பவ இடத்தில் திருமேனி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை