உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தகராறு செய்தவரை கைது செய்ய கோரி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

தகராறு செய்தவரை கைது செய்ய கோரி போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

சிவகாசி : திருவிழாவில் தகராறு செய்தவரை கைது செய்யாததை கண்டித்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையிட்டனர். சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டியில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. திருவிழாவின் போது இதே ஊரை சேர்ந்த ஜெகன்,21. என்பவர் தகராறு செய்தார். இவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி கிழக்கு போலீசில் நாட்டாண்மை ராமசாமி புகார் செய்தார். புகார் மீது போலீஸ் நடவடிக்கை இல்லை. பேச்சு வார்த்தை நடத்த சிலரை போலீசார் அழைத்து இருந்தனர். நேற்று மதியம் ஒரு தரப்பை சேர்ந்த 50 பெண்கள் கிழக்கு போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு புகார் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக பேசினர். அழகர் எஸ்.ஐ., பேச்சு வார்த்தை நடத்தி இருதரப்பினரும் சமாதனம் செய்து அனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை