உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நவீனமாகும் மகளிர் சுகாதார வளாகங்கள்

நவீனமாகும் மகளிர் சுகாதார வளாகங்கள்

விருதுநகர்:தமிழகத்தில் உள்ள மகளிர் சுகாதார வளாகங்களை, ரூ.170 கோடி செலவில் நவீனமயமாக்கி செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 12 ஆயிரத்து 618 ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்த, மகளிர் சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டன. இதில் 2001 முதல் 2005 வரை கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள் அனைத்திலும், புனரமைப்பு பணிகளை செய்ய அரசு உத்தரவிட்டது. சுகாதார வளாக கழிப்பறைகளில் வயதானவர்கள், சிறுவர்களுக்கென தனி ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்களை அழிப்பதற்கு இயந்திரங்களும் அமைக்கப்படுகின்றன. இதற்காக அரசு ரூ.170 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை பெண்கள் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த , ஊரக வளர்ச்சித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ