உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலம்

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி கன்னிகாபுரி கடற்கரை அருகே நேற்று இரண்டு வயதுடைய இரண்டு டன் எடையுள்ள, திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. 10.5 மீட்டர் நீளம், ஐந்து மீட்டர் அகலம் இருந்தது. உதவி வன பாதுகாவலர் ராஜேந்திரன் கூறியதாவது: இது பலத்த காயமடைந்து 25 நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம். பாறையில் மோதியோ, கப்பலின் 'புரொப்பல்லர்' தாக்கியோ இறந்திருக்கக்கூடும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ