காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி
மேட்டுப்பாளையம்: காரமடை அருகே 10 லட்ச ரூபாய் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் காரமடை பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரி என்பவரும், தனியார் நிதிநிறுவனத்தை சேர்ந்த கார்த்திக் லெனின் என்பவரும் 10 லட்ச ரூபாயுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது காரமடை அருகேயுள்ள குட்டையுர் என்ற இடத்தில் மர்மநபர்கள் 10 லட்ச ரூபாயை பறித்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.