உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.67 லட்சம் மோசடி டீ துாள் விற்பனையாளர் மீது வழக்கு

வேலை வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.1.67 லட்சம் மோசடி டீ துாள் விற்பனையாளர் மீது வழக்கு

தேனி: தேனியில் கணவரை பிரிந்து 12 வயது மகளுடன் வசிக்கும் பெண்ணிடம் சென்னை தலைமை செயலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.67 லட்சம் மோசடி செய்த என்.ஆர்.டி.,நகரைச் சேர்ந்த டீ துாள் விற்பனையாளர் சுரேஷ் என்ற மஹாதனதேவ் 46, மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.தேனி அல்லிநகரம் தெற்கு சொக்கம்மன் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மனைவி அம்பிகா 38. இவர் கருத்து வேறுபாடால் கணவரை பிரிந்து 12 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.டீ துாள் விற்பனை செய்யும் சுரேஷ், அம்பிகா குடும்பத்தினருக்கு அறிமுகமானார். பின் அவர், ''எனக்கு தலைமை செயலகத்தில் பணிபுரியும் முக்கிய அலுவலர்களை தெரியும்.அம்பிகாவிற்கு வேலை வாங்கித்தருகிறேன்,'' என்றார். அதை நம்பிய அம்பிகா 2022 ஆக., 20ல் ரூ.1.50 லட்சம் வழங்கினார். பணத்தை பெற்ற சுரேஷ், வேலை வாங்கித்தராமல் இழுத்தடித்தார். மேலும் சென்னை செல்ல வேண்டும் எனக்கூறி 2022ல் ஜூலை 8 ல் ரூ.10 ஆயிரம், பின் அடுத்தடுத்து ரூ.7 ஆயிரம் வங்கி மூலம் பெற்றார்.ஆனால் வேலை வாங்கித்தராமலும், பணத்தையும் திருப்பி தராமலும் மோசடி செய்தார்.அம்பிகா எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகார் அளித்தார்.எஸ்.பி., உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் உதயகுமார், எஸ்.ஐ., ஜீவானந்தம் மற்றும் போலீசார் சுரேஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஜூன் 25, 2024 08:33

லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பது இந்நாட்டில் அமல்படுத்தப் படாததால் லஞ்சம் கொடுத்து வேலையில் சேர்ந்து லஞ்சம் இன்றேல் சேவை இல்லை என்ற அராஜகம் தொடர்கிறது.வேலை கிடைக்கவில்லை எனில் காவல் துறையை நாடுகின்றனர். அவர்கள் மோசடி வழக்கு பதிவு செய்து திரும்ப பெரும் தொகையில் பங்கு பெறுகின்றனர், நேர்மையானவர்கள் அளிக்கும் புகார்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுப்பதில்லை அவர்களுக்கு ஆதாயம் இல்லாததால்.குற்றவாளிகள் லஞ்சம் கொடுத்தால் புகார் செய்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு ஒடுக்குகின்றனர்,இதற்கு நீதிபதிகள் என சொல்பவர்களும் லஞ்சத்தில் பங்கு பெற்றுக்கொண்டு உடந்தை.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி