உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செஸ் வீரர் குகேஷூக்கு ரூ.75 லட்சம் ஊக்கம் தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

செஸ் வீரர் குகேஷூக்கு ரூ.75 லட்சம் ஊக்கம் தொகை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: செஸ் வீரர் குகேஷூக்கு ரூ.75 லட்சம் ஊக்கம் தொகைக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடைபெற்றது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, குகேஷ், அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா உள்ளிட்ட 8 பேர் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழக வீரர் குகேஷ் (வயது 17) சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு, கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற, 2வது வீரர் என்ற சாதனையை குகேஷ் படைத்தார். இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். முதல்வர் ஸ்டாலின் குகேஷூக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சத்திற்கான காசோலையை வழங்கி கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

C.SRIRAM
ஏப் 28, 2024 23:43

ப்ரஞானந்தாவுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டது ?


கல்யாணராமன்
ஏப் 28, 2024 17:57

மக்களின் வரிப்பணம் செலவு செய்யும்போது பார்த்து செலவு செய்ய வேண்டும் குடிநீர், சாலை, தெரு மின் விளக்கு போன்றவற்றுக்கு செலவு செய்வதுதான் முதல் முன்னுரிமை கொடுக்க வேண்டும் இப்படி விளையாட்டு போட்டியில் கலந்து கொள்வதற்கு அல்லது வெற்றி பெற்றவற்கு இவ்வளவு பெரிய தொகை கொடுக்க தேவையில்லை


S. Gopalakrishnan
ஏப் 28, 2024 12:55

விஸ்வநாதன் ஆனந்த் அவர்களுக்கு எத்தனை லக்ஷம் தந்தீர்கள் ?


மேலும் செய்திகள்







புதிய வீடியோ