உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் மூலப்பொருள் கண்டெடுப்பு

விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல் மூலப்பொருள் கண்டெடுப்பு

சிவகாசி : விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில் சங்கு வளையல்கள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.விஜய கரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை என 600க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. நேற்று சங்கு வளையல்கள் தயாரிக்கப்பயன்படும் மூலப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் ''அதிக அளவில் சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், சுடு மண்ணால் ஆன காதணிகள் உள்ளிட்டவைகள் கிடைத்து வருகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட மூலப்பொருள் மூலம் சங்கு வளையல்கள் தயாரித்துள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை