உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாயாசம் சுவையானது; விஜய் பேச்சு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்!

பாயாசம் சுவையானது; விஜய் பேச்சு பற்றி மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ., அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்?' என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். 2026 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, தனது கட்சியான த.வெ.க.,வை தயார் படுத்தி வருகிறார் நடிகர் விஜய். இந்த நிலையில், த.வெ.க., 2ம் ஆண்டு தொடக்க விழா இன்று (பிப்.26) மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், பேசிய விஜய், மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அவரது பேச்சை விமர்சனம் செய்யும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவுவசனம் பேசுவதில் வல்லவரான விஜய், மத்திய பா.ஜ., அரசு குறித்து பேசும்போது மட்டும் பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? பாசிசம் - பாயாசம் என்று தொடர்ந்து நக்கலடிப்பதைப் பார்த்தால் இரண்டு குறித்தும் அவருக்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியிருக்கிறது.ஹிட்லர், முசோலினி ஆகியோருடைய வரலாறுகளை அவர் படிக்க வேண்டும். பாசிசம் பயங்கரமானது; படுகொலைக்கும் தயங்காது. பாயாசம் சுவையானது; உடல் நலத்திற்கு நல்லது.இவ்வாறு சண்முகம் தெரிவித்துள்ளார்.த.வெ.க.,வின் முதல் மாநாட்டில், 'அவர்கள் பாசிசம் என்றால், நீங்கள் என்ன பாயாசமா' என்று கூறி தி.மு.க.,வை விஜய் தாக்கி பேசியிருந்தார். இன்றைய பேச்சிலும், 'பாயாசம்' என்று குறிப்பிட்டு கிண்டல் செய்திருந்தார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் செயலாளர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Chinnamanibalan
பிப் 27, 2025 16:55

கம்யூனிஸ்ட் கட்சியினர் கூட்டணி என்ற பெயரில், திமுக விடம் சில சீட்டும், பல கோடி நோட்டும் பெற்றவர்கள். அவர்களின் பாயாச ருசி, தனி ருசிதான். எனவே அனுபவம் பேசுகிறது.


விவேகராசா
பிப் 27, 2025 09:55

எமக்கே பாயாசமா... எஸ்கே.....ப்.


kulandai kannan
பிப் 27, 2025 08:43

உலக வரலாற்றில் மிக அதிக கொலைகளை நடத்தியது கம்மிகள்தான்.


தனி
பிப் 27, 2025 07:53

ஸ்டாலினின் அந்த பாயாசம் உங்கெலுக்கெல்லாம் ரொம்ப இனிக்கும்… தேர்தலுக்கு பெரிய நன்கொடை பெறலாம் அதான் உங்களுடைய எதிர்பார்ப்பு


தனி
பிப் 26, 2025 21:51

திமுக பாயசத்த தான் ...


KR
பிப் 26, 2025 21:31

Will CPI or CPM have the guts to contest alone. The day it happens, they will be completely exposed. Iam sure they will not retain deposit any where if they contest alone and may not have more than 2 percent votes in most constituencies. Jayalalithaa went alone and exposed these parties that punch way above their real strength


Ravi
பிப் 26, 2025 21:20

பாயசம் சுவையானது தான் ஆனால் தீம்க என்பது ஒரு விஷம் கலந்த பாயசம். அதை நீங்களே பலமுறை ஒத்துக்கொண்டு உள்ளீர்கள் உதாரணம் பரந்தூர் பிஜேபி எதிர்ப்பு என்ற ஒன்றுக்காக மோசமான இன்னொரு தீமையை ஏற்க முடியுமா?


M S RAGHUNATHAN
பிப் 26, 2025 20:46

முதலில் சாம்சங் விவகாரத்தை முடிங்க. இல்லையென்றால் அந்த கம்பனி வேறு மாநிலத்திற்கு சென்று விடும். பின்னர் அயல் நாட்டு தொழில் முதலீடுகளுக்கு சங்கு தான். எப்படி ஆமை புகுந்த வீடு உருப்படாதோ, கம்யூனிஸ்ட் புகுந்த கம்பனி உருப்படாது.


Ganapathy
பிப் 26, 2025 20:25

நீங்க குலுக்கு....குலுக்கு–னு...குலுக்கிகிட்டேயிருங்க...


naranam
பிப் 26, 2025 20:23

கம்யூனிஸ்டுகளால் யாருக்கும் ஒரு பயனுமில்லை. தானும் வாழமாட்டான் அடுத்தவனையும் வாழ விட மாட்டான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை