உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

கல்லுாரி ஆசிரியர் சங்கங்களுக்கு, கல்லுாரி கல்வி இயக்குனர் கார்மேகம் அனுப்பியுள்ள கடிதத்தில், 'அரசு கலை அறிவியல் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் அறிவிக்கப்படும். இது தொடர்பாக, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. புதிய கல்லுாரிகளில் மாற்றுப் பணியில் உள்ள ஆசிரியர்களை, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய கல்லுாரிகளுக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.----மலேஷியாவில் பணிபுரிய, மாதம் 50,000 சம்பளத்தில் கட்டுமான பணியாளர்கள், 28,000 சம்பளத்தில் உதவியாளர்கள், 40,000 சம்பளத்தில் வெல்டர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 26க்குள் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, ஆகஸ்ட் 3க்குள், gmail.comஎன்ற 'இ - மெயில்' முகவரிக்கு அனுப்பலாம் என, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது._____________'கூட்டுறவு வங்கிகளில், பெண்கள் சுய தொழில் செய்து முன்னேற, ஒரு சுய உதவிக்குழுவுக்கு அதிகபட்சம், 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. 'இந்த உச்சவரம்பு தற்போது, 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது; தகுதியான குழுக்களுக்கு அதிக கடன் வழங்க வேண்டும்' என, வங்கி அதிகாரிகளுக்கு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் உத்தரவிட்டுள்ளார்._____________கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 1 துணைத்தேர்வில், சில பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத்தேர்வு நடந்தது. அதன் முடிவுகள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ