உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று

செப்டம்பர் 1, 1929 மதுரை வழக்கறிஞர் கணேசஅய்யரின் மகனாக, 1929ல் இதே நாளில் பிறந்தவர் ஜி.நாகராஜன். பள்ளி படிப்பை முடித்து, மதுரை கல்லுாரியில் புதுமுக வகுப்பில் சேர்ந்து, கணிதத்தில் முழு மதிப்பெண்ணுடன் தங்கப்பதக்கம் பெற்றார். அங்கேயே முதுநிலை பட்டம் வரை படித்து, காரைக்குடி கல்லுாரியில் ஆசிரியராக சேர்ந்தார்.பின், சென்னை கணக்காயர் அலுவலகத்திலும், மதுரை அமெரிக்கன் கல்லுாரியிலும் பணியாற்றினார். கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களால் ஈர்க்கப்பட்ட இவர், அமெரிக்காவில் கிடைத்த உயர்கல்வி வாய்ப்பை நிராகரித்து, கட்சி பணியில் ஈடுபட்டார். அப்போது, சுந்தரராமசாமி, ஜெயகாந்தன் உள்ளிட்டோருடன் பழகினார். 'ஜனசக்தி' இதழில், பல சிறுகதைகளை எழுதினார். இவரது, 'குறத்தி முடுக்கு, நாளை மற்றும் ஒரு நாளே' நாவல்கள் பிரசித்தி பெற்றன. இவர், 1981, பிப்ரவரி 19ல் தன் 52வது வயதில் மறைந்தார். அரசியலுக்காக ஆசிரியர் பணியை துறந்த எழுத்தாளர், 'ஜி.என்.,' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Subramanian
செப் 01, 2024 09:00

நாகராஜன் ஒரு அருமையான மனிதர்.


Subramanian
செப் 01, 2024 08:59

மீசை விட்ட நாகராஜன் மிலிட்டரி மேன் போல் தெரிகிறார். திராவிட கட்சிக்கார ஒரு பயலும் அவர் எதிரே நின்று முறைத்து பாரத்திருக்க மாட்டான்


Subramanian
செப் 01, 2024 08:55

அந்த கால அய்யர்கள் பெருத்த தாடி மீசை தலை சுற்றி வளர்ந்து தொங்கிய முடியுடன் இருந்திருந்தால் ராமசாமி அவர்களை பார்த்து மிரண்டு போய் அய்யர்களை கண்டு பயந்து ஓடியிருப்பார்.


Subramanian
செப் 01, 2024 08:50

மீசை விட்ட அய்யர் இது போல் அனைத்து அய்யர்களும் மீசை விட்டால் திமுக காரன் மிரளுவான்


Subramanian
செப் 01, 2024 08:47

மீசையுள்ள அய்யர். நீடிக்க அவர் பெயர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை