உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.இதையொட்டி நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்த நிலையில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைகொண்டு செல்கின்றனரா என வனத்துறையினர் சோதனை செய்து பக்தர்களை அனுமதித்தனர். ஓடைகளில் நீர் வரத்து குறைவாக இருந்தது. மதியம் 12:00 மணி வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மலையேறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை பூஜாரிகள் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார், வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை