உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை

முறைகேடு பேராசிரியர்கள் பணியாற்ற நிரந்தர தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கால்நடை மருத்துவ பல்கலை விழாவில் பங்கேற்ற அண்ணா பல்கலை துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் அளித்த பேட்டி:அண்ணா பல்கலையின் கீழ் உள்ள பொறியியல் கல்லுாரிகளில், ஆதார் எண்ணை முறைகேடாக பயன்படுத்தி, பேராசிரியர்கள் சிலர் பல கல்லுாரிகளில் பணியாற்றியது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கையை, கவர்னரிடம் தாக்கல் செய்துள்ளோம். கடந்த 2022 - 23ம் கல்வியாண்டில், 292 கல்லுாரிகளிலும், 2023 - 24ல், 295 கல்லுாரிகளிலும் முறைகேடுகள் நடந்ததாக கண்டறிந்துள்ளோம். இந்த கல்லுாரிகளுக்கு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.இந்த விவகாரத்தில், உயர் கல்வித்துறையும் கமிட்டி அமைத்துள்ளது. கல்லுாரிகள் தரும் விளக்கத்தை கமிட்டிக்கு அனுப்ப உள்ளோம். வரும் காலங்களில், இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில், பேராசிரியர்கள் மீது தவறா; கல்லுாரிகள் மீது தவறா என்ற விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த பேராசிரியர்கள், அண்ணா பல்கலையின் கீழ் பணியாற்றுவதில் இருந்து நிரந்தர தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Narayanasamy
ஆக 02, 2024 19:37

ஆக எந்த தவறும் செய்யலாமா. படித்தவர்கள் படிப்பிப்பவர்கள்.. .இதெல்லாம்...கலிகாலம்.


SANKAR
ஆக 02, 2024 12:53

அப்ப அண்ணாமலை பல்கலை முறைகேட்டு மட்டும் பதவி உயர்வா, அண்ணாமலை பல்கலையில் பேராசிரியர் அல்லாதவர்கள் பேராசிரியர்கள் என்று அரசு அறிவித்துள்ளது இதற்கு என்ன செய்யுப்போகிறீர்கள்


K MARIAPPAN
ஆக 02, 2024 11:56

பேராசிரியர்கள் விண்ணப்பம் செய்யும் பொது ஒரு கல்லூரியில் மட்டும் தான் விண்ணப்பிக்க வேண்டும். இதை தவிர்த்து 16 கல்வியியிலும் விண்ணப்பம் செய்ய கூடாது, இது மாதிரி தவறு செய்தால் ஆட்சியாளர்கள் பொறுப்பு அல்ல. நாங்கள் நேர்மையாக பணிக்கு ஆட்களை எடுக்கிறோம் , வேலைக்கு சேருபவன் தான் பொறுப்பு. என்று கல்வி மந்திரி கூறுவான்.


ஆரூர் ரங்
ஆக 02, 2024 11:41

கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து விட்டு மாணவர்களை வேறு கல்லூரிகளின் படிப்பைத் தொடர விடுங்கள். அவர்களுக்கான கட்டணத்தை கல்லூரிகளின் சொத்தை ஏலம் விட்டு கட்டுங்கள்.


xyzabc
ஆக 02, 2024 11:33

Our vidiyal cm claims TN offers the best education in the country. Ponmudi should be investigated.


naranam
ஆக 02, 2024 11:11

கல்லூரிகள் மீது தவறு என்றால் யார் பொறுப்பு?


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 02, 2024 10:57

இத்தகைய பல போலி பேராசிரியர்களை பதவீ நீக்கம் செய்தும் பணி புரிய தடை விதித்தும் தண்டிப்பதினால் பாதிக்கப்படுவது பேராசிரியர்கள் மட்டும் இல்லை அவர்கள் குடும்பத்தினரும் மற்றும் அவர்களை நம்பி தொழில் நடத்தும் புரோக்கர்களும் ஏஜண்ட்களும் கூட. இது நான் சொல்லும் கருத்து அல்ல. முத்தமிழ் அறிஞர் வாழ்ந்த வள்ளுவர் லாட்டரி டிக்கட்டை ஜெயா ஒழிக்க முற்பட்டபோது உதிர்த்த முத்துக்கள் அதனால், அனைத்து போலி பேராசிரியர்களுக்கும் புனர் வாழ்வு அளிக்க, சொல்லாததையும் செய்யும் இந்த மாடல் அரசு, உடனடியாக கலைஞர் நூற்றாண்டு போலி பல்கலைக் கழகத்தைத் துவக்கி அப்பல்கலையில் அனைத்து போலி பேராசிரியர்களையும், பணிக்கு அமர்த்தவேண்டும். அதுமட்டுமின்றி, இவர்களைப்போல இன்னும் எங்கெல்லாம் போலி பேராசிரியர்கள் பணியில் இருக்கிறார்களோ, அவர்களையும் கண்டறிந்து ஒரே இடத்தில் அனைத்து போலி பேராசிரியர்களையும் ஒரே போலி பல்கலை யில் பணிக்கு அமர்த்த வேண்டும்.


veeramani
ஆக 02, 2024 09:34

அண்ணா பல்கலைக்கழகம் இந்தமாதிரியான போலி பேராசிரியர்களை பணி அமர்த்திய குற்றத்திற்காக இரண்டு ஆண்டு காலத்திற்கு பல்களாக இணைவை ரத்துசெய்தல்வேண்டும் போலி பேராசியர்கள் தமிழகத்தில் எந்த கல்லூரியிலும் வேலை பார்ப்பதை தடுக்கவேண்டும்


duruvasar
ஆக 02, 2024 09:11

தில்லு முல்லு கட்சி ஆட்சியில் இதெல்லாம் சாதாரணம் ப்பா.


Matt P
ஆக 02, 2024 08:59

அப்படி போடு அருவாளை. படிச்சவங்க அரசியல்வாதிகளும் . இவனுக எல்லாம் அரசியல்வாதியாகி நாட்டை ஆளனும் ...கிழிஞ்சது போங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை