உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: 'இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை மீறும் வகையில், இந்திய தண்டனை சட்டங்களுக்கு பதிலாக, மத்திய அரசு உருவாக்கி உள்ள மூன்று புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:தற்போதுள்ள இந்திய தண்டனை சட்டம், 1860; குற்றவியல் நடைமுறை சட்டம், 1973 ஆகியவற்றை ரத்து செய்து, மத்திய அரசு இயற்றிய மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவதில், மாநிலம் எதிர்கொள்ளும் சில ஆட்சேபனைகள் மற்றும் சிக்கல்களை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.மேலும், இந்திய ஆதாரச் சட்டம், 1872, ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது.

அவகாசம் வழங்கவில்லை

இந்த சட்டங்கள், இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பட்டியல் மூன்றுக்குள் அடங்கும். எனவே, மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்தி இருக்க வேண்டும்.மாநிலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, போதிய அவகாசம் வழங்கவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் பங்கேற்காமல், புதிய சட்டங்கள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டன. அவற்றுக்கு, பாரதிய நியாயா சன்ஹிதா, 2023; பாரதிய நாக்ரிக் சுரஷா சன்ஹிதா, 2023; பாரதிய சாக் ஷ்யா ஆதினியம், 2023 என, சமஸ்கிருதத்தில் பெயரிடப்பட்டுள்ளன.இது இந்திய அரசியலமைப்பின் 348வது பிரிவை தெளிவாக மீறுகிறது. பார்லிமென்டால் நிறைவேற்றப்படும் அனைத்து சட்டங்களும், ஆங்கிலத்தில் இருப்பது கட்டாயம். கூடுதலாக இந்த சட்டங்களில், சில அடிப்படை பிழைகள் உள்ளன.

மறு பரிசீலனை

இந்த புதிய சட்டங்களை நடைமுறைப்படுத்த, கல்வி நிறுவனங்களுடன் கலந்துரையாடல், சட்டக் கல்லுாரி மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை திருத்துவதற்கு போதுமான நேரம் தேவைப்படும்.நீதித்துறை, காவல் துறை, சிறைத்துறை, வழக்கு விசாரணை, தடயவியல் போன்றவற்றுக்கு போதுமான ஆதாரங்களும், நேரமும் தேவை. தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசித்து, புதிய விதிகளை உருவாக்குவதும், தற்போதுள்ள படிவங்கள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை திருத்துவதும் கட்டாயமாகும்.எனவே, அனைத்து மாநிலங்கள் மற்றும் பிற முக்கிய அமைப்புகளின் கருத்துகளை கவனத்தில் வைத்து, புதிய சட்டங்களை மறு பரிசீலனை செய்து, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட, அந்த மூன்று சட்டங்களை நிறுத்தி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramanujan
ஜூன் 19, 2024 13:07

சுதந்திரம் அடைந்தது 1947 இல் . இன்னும் 1860 ஆண்டு சட்டம் தேவை என்று கூறுபவர்களை பார்த்து மக்களே நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 19, 2024 07:53

இப்போது உள்ள சட்டத்தில் ஓட்டைகளை பயன்படுத்தி வெளியே வந்து விடுகிறார்கள். இனிமேல் அது முடியாது அதனால் உடனே கதறுகிறார்கள


Kirubanithi
ஜூன் 19, 2024 07:02

குடும்ப சமுதாய மாநில சட்ட பிரச்சினைகளை உரிய காலத்தில் தீர்த்து அவரவர் வேலையை நாட்டுக்கு ஆக்கபூர்வ பங்களிப்பாக்குவதே சீர்மிகு தேச நிர்வாக மாண்பு. இதெல்லாம் அவர்களுக்கு சிறுபிள்ளைத்தனமான பெயர்மாற்ற இந்தி திணிப்பை விட முக்கியமில்லை.


Venkatesh
ஜூன் 19, 2024 06:56

இவரு சொல்றத கேக்க தான் அங்க ஆட்சி நடக்குது.....


ramani
ஜூன் 19, 2024 06:51

மத்திய அரசு உடனடியாக சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். திமுக எதிர்க்கிறது என்றால் அது நல்ல தேவையான சட்டம் தான். விரைவில் நிறைவேற்றட்டும்


Naga Subramanian
ஜூன் 19, 2024 06:37

ஆதாயம் இல்லாமல் எலி உடைஇன்றி போகாது என்பர். அதுதான் இது....


PRSwamy
ஜூன் 19, 2024 04:35

அதெல்லாம் சரி சுடாலின். ஜாபர் சாதிக் விஷயம் என்ன ஆச்சு? சம்பந்தம் இல்லாம பேசற?


மேலும் செய்திகள்