உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்: அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க உத்தரவு

வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்: அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க உத்தரவு

சென்னை:'வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர் ஒட்டி, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எதற்கும் அஞ்சாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் தாக்கல் செய்த மனு: அரசு வாகனங்கள் தவிர, இரண்டு மற்றும் நான்கு சக்கர தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்களில், 'போலீஸ், அரசு, ஊடகம், வழக்கறிஞர், டாக்டர்' என, ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது; மீறினால் அபராதம் விதிக்கப்படும்' என, ஏப்ரல், 27ல் சென்னை போக்குவரத்து போலீசார் அறிவித்தனர். மாநிலம் முழுதும் இந்த நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு அளித்த மனுவை பரிசீலிக்கும்படி உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநில போக்குவரத்து கமிஷனர் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் சார்பில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சுதாகரின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைப்பதிவு செய்த நீதிபதிகள், சட்ட விரோதமாக வாகன நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுபவர்கள் யாராக இருந்தாலும், எதற்கும் அஞ்சாமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவை அமல்படுத்தி, இரு வாரங்களில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

panneer selvam
ஜூலை 03, 2024 22:16

TN police is afraid of everyone especially when someone carries ruling Dravidian Party or their alliance parties flag . Even a panchayat councilor could abuse any police person in public . Thanks to Sailandra Babu DGP who made police force as Gandhian force but in uniform


Narayanan
ஜூலை 03, 2024 13:48

அதேமாதிரி எந்த வாகனம் பம்பர் / மற்றும் கருப்பு சூரியத்தடுப்பு ஸ்டிக்கர் இருந்தாலும் தயவு தாட்சிண்யம் பாராமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் . சாலைகளில் பல வாகனங்கள் இப்படி ஓடுகின்றன . போலீசும் பார்த்தும் பார்க்காதது போல் இருக்கிறது , சாதாரண மனிதனைத்தான் போலீஸ் பிடிக்கிறது .


தமிழ்வேள்
ஜூலை 03, 2024 13:00

சிலுவை , பிறை, 786 ஸ்டிக்கர் ஒட்டினால் எந்த போலீசும் கோர்ட்டும் கண்டுகொள்ளாது ..பெர்மிஷன் கிராண்டெட் ...


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜூலை 03, 2024 12:01

பாளையங்கோட்டை சிறையினிலே பாம்புகள் பல்லிகள் நடுவினிலே "அஞ்சாமல்" படுத்தவர் யாரு நம்ம கலைஞர் அய்யா பாரு இப்படி எல்லாவற்றுக்கும் (ஒன்லி கெட்டதுக்கு மட்டும்) உதாரணமாக விளங்கியவரை பார்த்தாவது திருந்துங்க மக்களே!


Rajarajan
ஜூலை 03, 2024 10:13

TNEB, CONSUMER, LAWYER, ARMY, POLICE, PRESS இப்படி ஏகத்துக்கும் ஒட்டிக்கிட்டு போறாங்க. போதாகுறைக்கு, அரசியல் கட்சி கொடியுடன், அதிவேகம் மற்றும் அதிக சத்தத்துடன் கூடிய ஹாரன் வேறு. இதையெல்லாம் மட்டும் ஏன் கண்டுக்கறதே இல்ல ?


வாய்மையே வெல்லும்
ஜூலை 03, 2024 09:37

இன்னும் மூன்று சக்கர மிதிவண்டியில் மற்றும் இரண்டு சக்கர சைக்கிளில் தான் ஸ்டிக்கர் ஒட்டாமல் உள்ளனர். இப்படி நடப்பது வெட்கக்கேடு.. நிறைய வண்டிகளின் முகப்பரப்பில் கட்சிக் கொடிகளை வைத்து மறைமுக மிரட்டல் விடுக்கின்றனர். இதற்கும் தீர்வு காணவேண்டும்


GoK
ஜூலை 03, 2024 09:24

என்ன வேணும்னா வொட்டிக்கங்க ஆனா வண்டி முன்னால பின்னால ஒரு குடும்பக்கட்சிக்கொடி ..அது இருந்தா ஒரு கொம்பனும் ஒன்னும் அசைக்க முடியாது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ