| ADDED : ஜூலை 11, 2024 02:49 AM
சென்னை:தமிழகம், புதுச்சேரியில், கடந்த ஒரு வாரமாக தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, மதுரை விமான நிலைய பகுதியில், 40 டிகிரி செல்ஷியஸ், அதாவது, 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை நகரம், வேலுார், 39; நாகை, பாளையங்கோட்டை, திருச்சி, 38 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவானது. அதாவது, 8 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டையொட்டி, வெப்ப நிலை பதிவானது.ஜூலை16 வரை கன மழைக்கு வாய்ப்பில்லை; பெரும்பாலான பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.