உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் பட்டா மாறுதல் 4 நாள் நிறுத்தம்

ஆன்லைன் பட்டா மாறுதல் 4 நாள் நிறுத்தம்

சென்னை: 'ஆன்லைன்' பட்டா மாறுதல் சேவை, நான்கு நாட்கள் நிறுத்தப்படுவதாக, நில அளவை மற்றும் நிலவரித்துறை அறிவித்து உள்ளது.அதன் அறிக்கை:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின், இணையவழி பட்டா மாறுதல் சேவை மேற்கொள்ளப்படும், 'தமிழ்நிலம்' மென்பொருளில், விவசாயிகள் விபர பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, இன்று காலை, 10:00 மணி முதல், 31ம் தேதி மாலை 4:00 மணி வரை, https://tamilnilam.tn.gov.in/Revenue/ மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html இணைய வழி சேவை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை