உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

12 பொருட்களுக்கு மட்டுமே 40% வரி! 5 மற்றும் 18% வரி பலனை மக்களுக்கு கொடுக்க சொல்கிறார்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்

சென்னை: “இப்போது, 5, 12, 18, 28 சதவீதம் என, நான்கு அடுக்குகளாக உள்ள சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி., 5, 18, 40 என, மூன்று அடுக்குகளாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும்,” என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள ஜவுளித்துறை தொழிலதிபர்களுடன், சென்னையில் நேற்று அவர் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்து ஏழு ஆண்டுகளாகி விட்டதால், அதிலுள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டும் என, பிரதமர் மோடி அறிவுறுத்தினார். சாத்தியம் அதன் அடிப்படையில், அனைத்து தரப்பினருக்கும், அனைத்து பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், புத் தம் புதிதாக ஜி.எஸ்.டி., விதிப்பு மாற்றி அமைக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அன்று மாலையே, ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் செய்வதற்கான பணிகள் துவங்கி விட்டன. இன்றும், நாளையும் நடக்கும் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், மத்திய அரசு சில முன் மொழிவுகளை முன் வைக்க உள்ளது. அதில், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தீர்வு இருக்கும். சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்கள், நடுத்தர மக்கள் வாங்கும் கார், பிரிஜ் போன்ற பொருட்களின் விலை குறையும் வகையில், ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்கள் இருக்கும். விலையை குறைப்பதோடு, வரி விதிப்பு முறையும் எளிதாக்கப்படும். அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிப்பு சாத்தியம் இல்லாததால், மூன்று அடுக்குகளாக வரி விதிப்பு இருக்கும்; 5 சதவீத வரி தொடரும்; 12 சதவீத வரி நீக்கப்படுகிறது. 12 சதவீத வரி விதிப்பில் இருக்கும் 99 சதவீத பொருட்கள், 5 சதவீத வரிக்குள் வந்துவிடும். சில உணவு பொருட்கள் பூஜ்ஜியம் சதவீதத்திற்கு வந்துவிடும்; 28 சதவீத வரியும் இருக்காது. இதிலுள்ள, 90 சதவீத பொருட்கள், 18 சதவீதத்திற்கு வந்து விடும். இந்த அளவுக்கு வரி குறைப்பு என்பது, இந்திய வரலா ற்றிலேயே இதுவரை நடந்ததில்லை.

நாளை அறிவிப்பு

இந்த அளவுக்கு வரி குறைப்பு சாத்தியமா என்று கேட்கலாம். பிப்ரவரி 1ம் தேதி தாக்கலான பட்ஜெட்டில், 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரும்பாலான பொருட்கள், 5 சதவீத ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வரப்படுகின்றன. வரி குறைப்பில், இது வரலாற்று புரட்சி. 28 சதவீத வரியில் இருக்கும் 12 பொருட்கள், 40 சதவீத வரிக்குள் கொண்டு வரப்படும். 40 சதவீத வரியா என்று கேட்கலாம். ஆனால், இந்த பொருட்களுக்கு, 28 சதவீத ஜி.எஸ்.டி.,யுடன், 88 சதவீதம் வரி இருந்தது. இப்போது, 40 சதவீதத்திற்குள் வருகிறது. இதற்கான அறிவிப்பு நாளை வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

பலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும்

ஜி.எஸ்.டி., வரி குறைப்பின் பலன்கள், மக்களுக்கு சென்று சேரும் வகையில், தொழில், வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். வரி குறைப்பின் பலன் தங்களுக்கு கிடைக்கவில்லை எனில், மக்கள் அதை விரும்ப மாட்டார்கள். - நிர்மலா சீதாராமன், மத்திய நிதியமைச்சர்

'மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லை'

நிதி யமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஜி.எஸ்.டி., கவுன்சிலில், அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உள்ளனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் தனியாக கூட்டம் நடத்தி, 'ஜி.எஸ்.டி., வரி குறைப்பை வரவேற்கிறோம். ஆனால், மாநிலங்களுக்கான வருவாய் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்' என, கோரிக்கை விடுத்துள்ளனர். ஜி.எஸ்.டி., அமலுக்கு வந்தபின், மாநில அரசுகளின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரி குறைப்பால் மாநில அரசுகளுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் வருவாய் குறையும். மத்திய அரசின் வருவாய் குறைவு என்பது, நிதியமைச்சரான எனக்கு பெரும் தலைவலி. ராணுவத்திற்கு அதிக நிதி கொடுக்க வேண்டும். இன்னும் ஆறு ஆண்டுகளுக்கு, ராணுவத்திற்கான நிதியை கொஞ்சமும் குறைக்க முடியாது. புகையிலை பொருட்கள் மீது, மத்திய அரசு கலால் வரி விதிக்கலாம். ஆனால், மதுபானம், சிகரெட், பெட்ரோல், டீசல், கேளிக்கை வரி, பத்திரப்பதிவு என, மாநில அரசுகளுக்கு வருவாய் அளிக்க பல வழிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் கடிதம்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், திருப்பூரின் ஏ.இ.பி.சி., எனப்படும், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணை தலைவர் சக்திவேல் அளித்த கடிதத்தின் விபரம்: அமெரி க்க சந்தைகளுக்கான ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க, 'போக்கஸ் மார்க்கெட்' திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கு, 20 சதவீதம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். இந்த சலுகையால், அமெரிக்க ஏற்றுமதி பாதிப்பை சமாளித்து, வர்த்கத்தை தக்கவைக்க முடியும் ஏற்றுமதி வர்த்தகத்தை பாதுகாக்க, வட்டி சமன்படுத்தும் திட்டத்தை புதிய வடிவில், ஐந்தாண்டுகளுக்கு செயல்படுத்த வேண்டும். வட்டி மானியத்துக்கான உச்சவரம்பு விதிமுறைகளை தளர்த்தி, வட்டி சமன்படுத்தும் திட்ட சலுகையை, 5 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும் ஏற் றுமதி தொடர்பான அனைத்து கடன்களுக்கும், அசல் தொகையை திருப்பி செலுத்த, இரண்டு ஆண்டு வரை அவகாசம் வழங்க வேண்டும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும், பருத்தி பஞ்சில் உற்பத்தியான ஆடைகளுக்கு, பரஸ்பரம் வரி விலக்கு சலுகை வழங்க, அமெரிக்காவிடம் கோரிக்கை வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

CPs
செப் 05, 2025 08:12

முதலில் இவ்வளவு பெரிய அயோக்கிய தனமாக 28% 18% 12% என வரி விதித்ததே தப்பு. இதில் இப்போது 5% 18% என்பதும் அயோக்கியதனம் தான். இப்போது 12% வரி விதித்த பொருட்கள் 18% வரிக்குள் வந்து விடும். மேலும் 18% வரி என்பதே மிகப்பெரிய கொடுமை. உற்பத்தி செய்பவன், அதை வாங்கி விற்பவன் யாருக்கும் முழுதாக 18% லாபம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் ஒரு ஈழவும் செய்யாத இந்த சங்கி கிரிமினல் அரசுக்கு சுளையாக 18% வரி கிடைக்கிறது. முதலில் இந்த 18% வரியை 10% மாக குறைக்க வேண்டும்.. மேலும் எத்தனாலை கலந்து விற்கும் கலப்பட பெட்ரோலை நிறுத்த வேண்டும். பெட்ரோலுக்கு பதிலாக எத்தனாலை கலந்து விட்டு அதற்கு பெட்ரோல் விலையை வாங்குவது அயோக்கிய தனம். மேலும் பெட்ரோல், டீசல் மீது இருக்கும் 100% வாட் வரி நீக்கப்பட வேண்டும். இந்த பெட்ரோலை போடுவதால் வாகனங்களின் மைலேஜ் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் வாகன இன்ஜின்கள் பழுதாகிறது. இந்த கேடுகெட்ட பாஜக ஓட்டு திருட்டு அரசு உடனே கலைக்கப்பட வேண்டும்.


Kanns
செப் 03, 2025 13:39

Actually Increasing But Bluffing


Mario
செப் 03, 2025 09:03

நீட் தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சீட் ஒதுக்கீடு.. அதிர்ச்சி தகவல்..


vivek
செப் 03, 2025 11:44

மணிப்பூரில் இலவச காலை உணவு மரியாவுக்கு உண்டு


Mecca Shivan
செப் 03, 2025 12:59

திராவிட அடையாள அட்டை இருந்தால் TNPSC தேர்வில் சிறப்பு சலுகை கிடைத்ததே அப்படியா. மறுதேர்வு வந்தது எப்படி அடிமையே


Paramasivam
செப் 04, 2025 09:16

இது எப்படி என்று எம்பிபிஎஸ் முடித்து விட்டு மேற்படிப்பிற்கு சென்ற அல்லது தயாராகிக்கொண்டு இருப்பவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கெல்லாம் மூளை வேண்டும். அது இருந்திருந்தால் இந்த மாதிரி கருத்தே இங்கு வந்திருக்காது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
செப் 03, 2025 08:26

வரி குறைப்பு பலன் நேரடியாக மக்களை சேரவேண்டும் என்றால் அதை மக்களுக்கு விவரமாக தெரியப்படுத்த வேண்டும். 1. இணையதளம், பத்திரிகைகளில் ஒவ்வொரு பொருளின் முந்தைய மற்றும் தற்போதைய வரி மாற்ற விவரங்களை வெளியிட வேண்டும். 2. வியாபார நிறுவனங்களில் அதே போன்று பழைய மற்றும் புதிய வரி விபரங்களை பிரதானமாக விளம்பரம் செய்ய வேண்டும். 3. கடைகளில் பிரிண்ட் செய்யும் ரசீதுகளில் பழைய மற்றும் புதிய வரி விவரங்களை குறிப்பிட்டு நுகர்வோர் வரி குறைப்பினால் எவ்வளவு பணம் சேமித்துள்ளார் என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். இல்லாவிடில் வியாபாரிகள் பழைய வரியிலேயே நுகர்வோருக்கு ரசீதுகள் கொடுத்துவிட்டு அரசுக்கு குறைந்த வரி விகிதத்தின்படி பணம் செலுத்தி லாபம் சம்பாதிப்பார்கள். மக்களின் பணத்தை வியாபாரிகள் நடுவில் புகுந்து தின்று விடுவார்கள். அரசு வரிக்குறைபினால் மக்கள் நேரடியாக பலன் பெறுவதை விழிப்புடன் கண்காணிக்க வேண்டும். இல்லாவிடில் நஷ்டம் மக்களுக்கும், ஆளும் கட்சிக்கும்தான். வியாபாரிகள் காட்டில் மழை. உஷார் மக்களே. உஷார் ஆளுங்கட்சிகளே.


Ragupathi
செப் 04, 2025 09:57

ஆமாம் நல்ல கருத்து அரசுகள் இதை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்.


VENKATASUBRAMANIAN
செப் 03, 2025 08:06

வரியை குறைத்தால் கூவுகிறார்கள். இதே வாய் தான் ஜிஎஸ்டி வரி அதிகம் என்று குரைத்தது. என்ன ஜென்மங்கள் ஓ. எல்லாவற்றிலிம் அரசியல்


R Dhasarathan
செப் 03, 2025 07:00

கடந்த 7 வருடங்களாக எத்தனை சதவீதம் சிறு குறு நிறுவனங்கள் எவ்வாறெல்லாம் பாதித்துள்ளது என்று கூற முடியுமா அவர்களால்.. பெட்ரோல் ஏன் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவில்லை.


Mecca Shivan
செப் 03, 2025 12:58

பெட்ரோல் டீசல் மற்றும் சாராயம் அதாவது உனது டாஸ்மாக் அமிர்தம் இவைகள் எல்லாம் ஜீ எஸ் டி க்குள் கொண்டுவர திராவிட கம்யூனிச காங்கிரஸ் உதவாக்கரை அரசுகள் மறுக்கின்றன


அப்பாவி
செப் 03, 2025 06:43

வெறும் பன்னுக்கு 5, பட்டருக்கு 18, பன் ப்ளஸ் பட்டருக்கு 40 பர்சண்ட். புரிஞ்சிடிச்சு


google
செப் 03, 2025 05:04

இப்ப தான் நிதி அமைச்சர் வேலை செய்து வருகிறார்.


அப்பாவி
செப் 03, 2025 04:58

நிதிப் புரட்சித் தலைவி நிர்மலா ஜீ வாழ்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை