உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 தேர்தலிலும் அதிமுக., - தேமுதிக,. கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி

2026 தேர்தலிலும் அதிமுக., - தேமுதிக,. கூட்டணி தொடரும்: பிரேமலதா பேட்டி

சென்னை: அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய சென்னை, திருவள்ளூர் (தனி), விருதுநகர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய தொகுதிகள் தே.மு.தி.க.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. பிறகு பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, 2026 தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றார்.லோக்சபா தேர்தல் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்த அ.தி.மு.க., - தே.மு.தி.க., இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தே.மு.தி.க.,வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக இன்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்தார். அவரை, தே.மு.தி.க.,வின் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார்.இந்நிலையில் இன்று( மார்ச் 20) மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இபிஎஸ்., -ம், பிரேமலதாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டனர். தே.மு.தி.க.,வுக்கு திருவள்ளூர்( தனி) , மத்திய சென்னை, கடலூர்,தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சட்டசபை தேர்தலிலும் கூட்டணி

இதன் பிறகு நிருபர்களிடம் பேசிய பிரேமலதா: அதிமுக., - தேமுதிக கூட்டணி இயற்கையாக அமைந்த ராசியான கூட்டணி. மக்கள் நலனுக்காக கூட்டணி அமைத்துள்ளோம். 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலும் அ.தி.மு.க., உடன் கூட்டணி தொடரும். நாளை முக்கியமான அறிவிப்பு தே.மு.தி.க., அலுவலகத்தில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார். பிறகு இ.பி.எஸ்., பேசுகையில், கடந்த தேர்தலில் கூறிய வாக்குறுதிகளை தி.மு.க.,வினர் நிறைவேற்றினார்களா? அவர்கள் வெற்றி பெற்றால் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. விளவங்கோடு தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடும். விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

விஜயகாந்த் மகன் விருப்ப மனு

தே.மு.திக., சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், விருதுநகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Rajarajan
மார் 21, 2024 07:35

அனைத்து கட்சிகளும் சிதறி இருப்பதால், தி.மு.க.வுக்கே வெற்றி வாய்ப்பு சாதகம். இருப்பினும், ஒருவேளை 2026 ல் மாற்றம் வந்தால்னு, இப்போவே துண்டு போட்டு வெச்சிட்டாங்க போல. சரி, இப்போது உன்னைவிட்டால் எனக்கு ஆள் இல்லை. என்னைவிட்டால் உனக்கு ஆள் இல்லை. தொகுதிகளை காலியாக விடமுடியாமல், எல்லா கட்சியும் தொகுதிகளை வாரி வீசுகின்றனர், தி.மு.க. வை தவிர. இது யதார்த்த நிலவரம்.


Indhuindian
மார் 21, 2024 07:01

க்ராமத்துலே ஒரு கதை சொல்லுவாங்க- பஞ்ச பாண்டவர் எத்தனைபேருன்னு கேட்டதுக்கு காட்டில் கால் போல மூணுன்னு சொல்லி ரெண்டு விரல காட்டி ஒண்ணுனு ஏஷுதி அதையும் ஆஷிச்சிட்டான்னு. எதுக்கு பொருந்துதோ இல்லையோ கூட்டணி பேச்சு வார்த்தைக்கு சரியா இருக்கு


Jai
மார் 20, 2024 21:39

தேமுதிக நிற்கும் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப் போவது அதிமுக தான். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் போது அதிமுக நேரடியாக களத்தில் இறங்கி கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பணத்தை இடையில் எடுத்துக்கொண்டு விடுவார்கள் . வாக்காளர்களுக்கு சென்று சேராது.


Kuppan
மார் 20, 2024 20:29

எல்லா தேர்தலிலும் இதே வேலையா போச்சி, அங்க பேரம் பேசி ..இங்க பேரம் பேசி கடைசி ஆளா வண்டியில எற வேண்டியது. இந்த கட்சி வளராம போனதுக்கு 99 % இதான் காரணம்.


A1Suresh
மார் 20, 2024 20:26

தண்ணீரில் எழுதிய எழுத்துக்களே பாமக, மற்றும் தேமுதிக தரும் சவடால் பேச்சுக்கள்


A1Suresh
மார் 20, 2024 20:26

பல்டியடிப்பதில் பீஹாரின் முதல்வர் திரு.நிதிஷ்குமாருக்கு குருநாதர்கள் நமது பாமகவும் தேமுதிகவும்.


J.V. Iyer
மார் 20, 2024 20:17

இவர்கள் இனி பாஜகவுக்கு கூட்டு சேரமுடியாது. வேண்டுமானால் திமுகவோடு கூட்டு, கரி வைக்கலாம்.


sankar
மார் 20, 2024 20:15

அதிமுக கூட்டணிக்கு போடுவது குப்பையில் போடுவதற்கு சமம் - தாமரைக்கு வாக்களிப்போம் - தருதலைகளை ஓடவைப்போம்


theruvasagan
மார் 20, 2024 21:52

ரைமிங் செமையா இருக்கு


sankaranarayanan
மார் 20, 2024 19:19

இந்த அம்மா அமரர் விஜயகாந்த் சம்பாதித்துவைத்த சொத்துபத்துக்களையே ஒழுங்காக காப்பாற்றினால் போதும் இப்போது உள்ள சூழ்நிலையில் இவர்களுக்கு தேர்தலில் நின்று அவர் சம்பாதித்து வைத்த சொத்துக்களை விரயம் ஆக்கி கடைசியில் உணருவதுக்குள் காலம் தாழ்ந்துவிடும் இது அரசியலில் நடக்கும் கண்கூடா காட்சிக்குகளாகும் தேய்பிறையில் சேர்ந்தால் தனக்கும் அதேகதிதான் என்பது இன்னுமா இவர்களுக்கு விளங்கவில்லை


தாமரை மலர்கிறது
மார் 20, 2024 19:16

பிரேமலதாவை விட பெரியக்கட்சி தினகரனுக்கு ரெண்டு தான் பிஜேபி கொடுத்தது. ஆனால் எடப்பாடி பிரேமலதாவிற்கு அள்ளிஅள்ளி தொகுதிகளை வழங்கியுள்ளார். காரணம் எடப்பாடி போட்டிபோடபோவது ஆமைக்கறி சாப்பிடும் ராஜாதி ராஜ கம்பிர தமிழக அதிபர் சீமானுடன்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை