உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமாகின தமிழக அரசிதழில் வெளியீடு

கவர்னர் ரவி நிறுத்தி வைத்த 10 மசோதாக்களும் சட்டமாகின தமிழக அரசிதழில் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, கவர்னர் ரவியால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பல்கலைகள் தொடர்பான, 10 மசோதாக்கள் சட்டமாகி உள்ளன.பல்கலைகள் அதிகாரம் தொடர்பாக, சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பட்ட 10 மசோதாக்கள் மீது, எந்த முடிவும் எடுக்காமல் கவர்னர் ரவி கிடப்பில் வைத்திருந்தார். பின், அந்த மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார். இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'கவர்னர் ரவியின் செயல் சட்ட விரோதமானது. அவரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படும்' என்று, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.அதன்படி, கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் சட்டமாகி உள்ளதாக, அரசிதழில் தமிழக அரசு அதன் விபரங்களை வெளியிட்டுள்ளது.அதன் விபரம்:கடந்த 2022ம் ஆண்டு தமிழக பல்கலைகள் திருத்த சட்ட மசோதா, 2022 அக்டோபர் 19ல், சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட கவர்னரின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் அளிக்க, 2023 நவம்பர் 13ல் கவர்னர் மறுத்தார். அதனால், அந்த மசோதா, 2023 நவம்பர் 18ல் சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அதை அவர், நவம்பர் 28ல் ஜனாதிபதிக்கு அனுப்பினார்.இது உட்பட 10 மசோதாக்கள், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 2023 நவம்பர் 18ல் கவர்னர் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதப்படுதல் வேண்டும்.இவ்வாறு அரசிதழில் கூறப்பட்டுள்ளது.கவர்னரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களும் சட்டமாகியுள்ளதால், பல்கலைகள் தொடர்பாக கவர்னரிடம் இருந்த அதிகாரங்கள், தமிழக அரசுக்கு மாற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

M S RAGHUNATHAN
ஏப் 14, 2025 20:23

அரசின் எல்லா ஆணைகளும், சட்டங்களும் ஆளுநரின் ஒப்பத்தின் பேரில் மட்டும் தான் வெளி இடமுடியும். செயலர்களோ , அல்லது அங்கீகரிக்கப் பட்ட அதிகாரிகளோ ஆளுநர் பெயரால் தான் gazette notification செய்ய முடியும் என்பது நிர்வாக நடைமுறை. இது ஒரு சட்ட விரோத செயல். உச்ச நீதி மன்றம் ஆளுநரின் அதிகாரத்தையோ அல்லது குடியரசு தலைவரின் அதிகாரத்தையோ பிரயோகிக்க முடியாது. Gazette notifications or utive orders can be issued only under the signature and name of Governor only I am afraid that the law officers are giving wrong advice to the Chief Minister.


rasaa
ஏப் 13, 2025 12:20

ஏற்கனவே இட ஒதுக்கீடு என்ற பெயரில் எந்த ஒரு தகுதியுமே இல்லாதவர்களை ஆசிரியர்களாக்கி மாணவர்களை அடிமட்டத்திலே முட்டாள்கள் ஆக்குகின்றார்கள். கல்வி துறையில் ஊழலில் முனைவர் பட்டம் பெற்றவர்களை நியமித்து செழிக்கின்றார்கள். ரசிகர் மன்ற தலைவரை கல்விதுறைக்கு அமைச்சராக்கி மகிழ்கின்றார்கள். பெண்களை பலவிதங்களில் அங்கம் அங்கமாக ரசித்து எழுதி, பேசி, மகிழ்ந்து வருபவர்களை பாடநூல் கழகத்தில் சேர்த்து அவர்கள் கொடுக்கும் பாடத்தை? மாணவர்களுக்கு புகட்டுகின்றார்கள்.


Dharmavaan
ஏப் 13, 2025 05:16

பாராளுமன்றம் தன அதிகாரத்தை காட்ட வேண்டும்.மக்கள் பாராளுமன்றத்துக்கே அதிகாரம் கொடுத்துள்ளனர் நீதகி மன்றத்துக்கு அல்ல நீதி மன்றம்கட்டுப்படுத்தப்பட வேண்டும் தவரும் நீதிக்கு இம்பீசமென்ட் ஒன்றே வழி


Dharmavaan
ஏப் 13, 2025 05:13

நாடு நாசமாக இது போன்று நடக்கிறது.


மீனவ நண்பன்
ஏப் 13, 2025 02:25

அப்பீல் செய்ய அவகாசம் இருக்குமே ..


மதிவதனன்
ஏப் 13, 2025 02:07

அதைவிட கேவலம் இந்த 400 பக்க ஜுட்ஜ்மெண்ட் எல்லா மாநில கோவெர்னெர் களுக்கு அனுப்பி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு வேறு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை