உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகாத்மா காந்தியின் லட்சியங்கள் சத்தியம், அகிம்சை, எளிமை: கவர்னர் ரவி

மகாத்மா காந்தியின் லட்சியங்கள் சத்தியம், அகிம்சை, எளிமை: கவர்னர் ரவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை மகாத்மா காந்தியின் லட்சியங்கள் என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தியின் புண்ணியதிதியில் அவருக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன். சத்தியம், அகிம்சை, எளிமை, உலகளாவிய சகோதரத்துவம் ஆகிய அவரது லட்சியங்கள் பாரதத்தின் ஆன்மாவாக இருப்பதுடன் அவை உள்ளடக்கிய மற்றும் நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான உத்வேகத்தின் ஆதாரமாகவும் வழிகாட்டும் சக்தியாகவும் என்றும் நீடிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

K.Ramakrishnan
ஜன 30, 2024 19:39

என்ன ரவி... இப்படி பல்டி அடிச்சுட்டாரு.. காந்தி மீது திடீர்னு பாசம் ஏன்?


DVRR
ஜன 30, 2024 17:16

உண்மையான தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்தார் வல்லபாய் படேல். இந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தான் ஒரே காரணம் இந்திய பாகிஸ்தான் பிரிவினை முஸ்லீம்களுக்காக, ஆனால் முஸ்லீம் அதே அளவு இந்தியாவில் தங்குதல், காஷ்மீர் யாருக்கு என்ற அனாவசிய விவாதம் 370....


J.Isaac
ஜன 30, 2024 14:38

நேதாஜியின் லட்சியங்கள் ?


பாரதி
ஜன 30, 2024 13:29

ஈரோடு ராமசாமியின் சித்தாந்தம், "இவைகள் எல்லாம் மேடையில் பேசுவதற்கு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் கடைபிடித்து விடக்கூடாது. அது வெளியிலும் தெரிய கூடாது. "


venugopal s
ஜன 30, 2024 13:10

இப்போது திடீரென அவருடைய ஞாபகம் வந்து விட்டது!


ஆரூர் ரங்
ஜன 30, 2024 12:11

சம்பிரதாய அறிக்கைகளில் உள்ளர்த்தம் பார்க்கக் கூடாது.


Siddhanatha Boobathi
ஜன 30, 2024 11:23

அடி பலமோ


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 30, 2024 13:06

முன்பும் இவர் மோகன்தாஸ் காந்தியை இகழவில்லை.. நேதாஜி தேசத்தந்தை என்கிற பட்டத்துக்கு தகுந்தவர் என்றார்... எப்படி சொன்னாலும் தப்பா?? அதென்ன டீம்கா தலைவன் முதல் தொண்டன் வரை மூளையை ... வைத்துவிட்டார் ????


Barakat Ali
ஜன 30, 2024 13:38

காங்கிரஸ் தலைமை வகித்து அதில் திமுகவும் அங்கம் வகித்தது யூ பி ஏ கூட்டணி .... அந்தக்கூட்டணி ஆட்சியில் இருந்த பொழுது 2012ஆம் வருடம் ஆர் டி ஐ யில் கேள்வி கேட்ட ஒரு மாணவிக்கு அன்றைய அரசின் உள்துறை அமைச்சகம் பதிலளித்தது.. அதில் தேசத்தந்தை என்கிற பட்டத்தை அரசு காந்தி உட்பட யாருக்கும் வழங்கவில்லை என்று தெரிவித்தது.... அதே காங்கிரஸ்தான் இன்று கவர்னர் காந்தியை அவமதித்து விட்டார் என்று கூறிப் போராடுகிறது ....


Indian
ஜன 30, 2024 11:05

துரு பிடித்த இரும்பை தட்டிக்கொண்டே இருக்கவேண்டும்


Ramesh Sargam
ஜன 30, 2024 11:05

அந்த மூன்றும் எங்களுக்கு தெரியாது என்றுதான், மாநில முதல்வர் ஸ்பெயின் சென்றுவிட்டார்.


Hari
ஜன 30, 2024 13:56

30000 ஆயிரம் கொடிகளை இன்வெஸ்ட் பண்ணனும் .பிடி தியாகராஜன் வருந்தாமல் இருக்கணும் அதனால தான் , பாருங்க இனிமேல் இவர்கொடுத்த பணம் மறுபடியும் தமிழகத்திற்கு மட்டும் வரும் . இதற்குமுன் எஸ் ரா சற்குணம் இதை செய்தார் இப்போது நேரடியாக தி மு க குடும்பம் காலத்தில் இறங்கி இன்னும் லாபம் பார்க்குது.


DVRR
ஜன 30, 2024 17:22

விரைவில் இந்த செய்தியை எதிர் பாருங்கள் ஸ்பெயின் ரூ 12,000 கோடி இன்வெஸ்ட் செய்கின்றது என்று உள்ளே நுழைந்து பார்த்தால் தெரியும் அதே லூலூ மால் கதை துபாய் பயணம் ரூ 6000 கோடி இன்வெஸ்ட்மென்ட்???அதே அச்சு அசலாக நடக்கும்???யாரு பணம்???


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி